சனி, 4 ஏப்ரல், 2020

"டோக்கன் வழங்கும் போதே ரூ.1000 வழங்கப்படும்" - முதல்வர் பழனிசாமி

ஊரடங்கை பொதுமக்கள் மதிக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சென்னை பெரியமேடு, ராஜா அண்ணமலைபுரம், வேளச்சேரி பகுதிகளில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில், முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், கொரோனா நோயின் தீவிரத்தை சிலர் புரிந்துகொள்ளாமல், வெளியே நடமாடி வருவதாகவும், 144 ஊரடங்கை பொதுமக்கள் இனி கடுமையாக பின்பற்ற வேண்டும், என்றும் குறிப்பிட்டார். 
photo
தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததோடு, கொரோனா என்பது ஒரு கொடிய கொள்ளை நோய் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களுக்காக தினமும் கடைகளுக்கு செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும், எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை தவிர்க்க, வீடுகளுக்கு டோக்கன் வழங்கும்போதே ரூ.1000 வழங்கப்படும், என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மேலும், பத்திரிகையாளகளுக்கும், ஊடகத்தினருக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும், என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
credit ns7.tv

Related Posts:

  • Hadis இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்க… Read More
  • ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது! பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலி… Read More
  • ரக்‌ஷானா பர்வீன் 497/500 தமிழை முதல் பாடமாக கொண்டு ராமநாதரபுரம் மாவட்டத்தின் செய்யதம்மாள் மேல்நிலைபள்ளி மாணவி ரக்‌ஷானா பர்வீன் 497/500 மாநில அளவில் மூன்றாமிடம் !… Read More
  • விளாம்பழம் (Wood Apple) பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த… Read More
  • வீடுகளுக்கான புதிய மின் கட்டண விபரம் அறிவிப்பு வீடுகளுக்கான மின் கட்டண புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட… Read More