செப் - 16 - பந்துக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவு
( ம.ஜ.க பொதுச்செயலாளர் M . தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை )
தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்கள் நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை , காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத கன்னட வெறியர்கள் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் , தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையில் இறங்கி வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த அநீதிக்கு எதிராகவும், காவிரியாற்றின் உரிமைக்காகவும் தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு இருக்கிறார்கள் .
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தவறான அணுகுமுறைகளை பின்பற்றும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் செப் - 16 அன்று தமிழகத்தில் நடத்தும் பந்துக்கு ஆதரவு கேட்டு காவிரி போராட்டக் குழுவின் சார்பில் P.R.பாண்டியன் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ம.ஜ.க. நிர்வாகக் குழு பரிசீலித்தது.
தமிழக மக்களின் நலன் காக்க, அரசியல் பேதங்களை கடந்து நடைபெறும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது .
அமைதி வழியில் நடைபெறும் இப்போராட்டம் வெற்றிபெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்துகிறது.
இவண்
M .தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.09.2016
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.09.2016