செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தொடர்விடுமுறையால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் !!


அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
அக்டோபர் 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 9ம் தேதி ஞாயிற்று கிழமை வழக்கமான விடுமுறை ஆகும். ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் 10ம் தேதியில் இருந்து 12ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவும் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனையில் தடை எதுவும் இருக்காது என்று வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.