ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

சிறந்த நஷ்ட ௬ஈடாக

3-09-2016 வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி,
உடைக்கப்பட்ட கடைகள் - 22
எரிக்கப்பட்ட கடைகள் - 11
கொள்ளையடிக்கப்பட்ட வீடு - 1
மாடுகள் திருட்டு - 15
வாகனங்கள் எரிப்பு - (2 பைக், 1 ஆட்டோ)
6 மொபைல் கடைகள், 7 ஹோட்டல்கள், 2 செப்பல் ஷோரூம், 1 பேன்சி கடை,1 பாத்திர கடை, 1 ஜூஸ் கடை, 1 மீன் கடை, 1 பிரியாணி கடை, 1 பீஃப் ஸ்டால் மற்றும் 1 மரக்கடை
மொத்தமாக சுமார் 3.5 கோடி அளவிற்கு நஷ்டமடைந்திருக்கிறார்கள் கோவை பகுதி முஸ்லிம்கள்...
எனதருமை இந்து மத சொந்தங்களே... நிச்சயமாக இதற்கெல்லாம் நஷ்ட ஈடு வேண்டும். ஆனால் நாங்கள் பணத்தை கேட்கவில்லை. அந்த கோரிக்கையை அரசிடம் வைக்கிறோம்.
நீங்கள் இந்த வன்முறையாளர்களை ஆதரிக்க மாட்டீர்கள் எனத்தெரியும். ஆனால் அவர்களுக்கு தண்டனை வேண்டும்.
அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்...
அவர்களை புறக்கணியுங்கள்...
அவர்களை இழி நிலைக்கு தள்ளுங்கள்...
அவர்களை தனிமைப்படுத்துங்கள்...
நிச்சயமாக இது பணத்தை விட சிறந்த நஷ்ட ௬ஈடாக இருக்கும்...