வியாழன், 29 செப்டம்பர், 2016

#தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்!

பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜாவை
#தேசிய_பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் #கைது செய்ய வேண்டும்!
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை ! !
28.09.2016 (புதன்) அன்று சென்னை தி.நகரில் சசிகுமார் படுகொலைக்கு கண்டனம் என்ற பெயரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச். ராஜா #வன்முறைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.
தங்களது #ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
பொதுவாக சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது வழக்கம். எத்தனையோ முஸ்லிம் சமுதாயப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி மறுக்கப்படும் போதெல்லாம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு #முஸ்லிம்கள் கைதாகியுள்ளனர்.
#கோவையில் முஸ்லிம்களின் கடைகளைச் சூறையாடிய கும்பல் அதே காரணத்துக்காக அனுமதி கேட்கும் போது அனுமதி மறுப்பதை இவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து #ஆம்பூரில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அரசு நடந்து கொள்வதாக ஆதாரமற்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஆம்பூர் #கலவரத்தால்காவல்துறைக்கும்,பொதுமக்களுக்கும் ஏற்பட்ட சேதத்தைக் கவனத்தில் கொண்டு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மறுநாள் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனர். #ரம்ஜான் பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் #சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் #உயர்_நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற்று இன்று வரை வழக்கை சந்தித்து வருகின்றனர்.
கோவையில் வெறியாட்டம் நடத்திய #இந்துத்துவாஅமைப்புக்கு எதிராக மறுநாள் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் தான் ஆம்பூர் கலவரத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து மதவெறியைத் தூண்டுகிறார்.
#டிஎன்டிஜேயின் ஒரு தலைவர் பேசிய வீடியோவின் முழுப்பகுதியையும் கூறாமல் ஒரு குறிப்பிட்ட வாசகத்தை மட்டும் எடுத்துக் கூறி அவரை இந்துக்களின் எதிரி போல் சித்தரிக்க முயல்கிறார். இலட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டாலும் சட்டத்திற்கும் #ஜனநாயகத்திற்கும் மதிப்பளித்து நடப்போம் என்ற ரீதியில் கூறப்பட்ட அந்தப் படக்காட்சி செய்தியை திரித்து மத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் ஹெச். ராஜா.
இவ்வாறு #விஷ விதைகளைத் தூவுவதும், அவ்வாறு பேசியதை பின்னர் மறுப்பதும் இவருக்கு கை வந்த கலை என்பதை இவரது முந்தைய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர்.
#அண்ணன்_தம்பிகளாய் பழகிவரும் இந்து முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு உண்டாக்கி #தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஹெச். ராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மாநிலத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசிற்கும்,#காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கிறது.
இப்படிக்கு
எம்.முஹம்மத் யூசுஃப்
மாநிலப் பொதுச் செயளாலர்