திங்கள், 26 செப்டம்பர், 2016

திண்டுக்கல்லில் கலவரத்துக்கு திட்டமிடும் காவி பயங்கரவாதிகள் முஸ்லிம் இளைஞர்களே ! :சூழ்ச்சியை முறியடிப்போம்

திண்டுக்கல்லில் கலவரத்துக்கு திட்டமிடும் காவி பயங்கரவாதிகள் முஸ்லிம் இளைஞர்களே ! அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர்கள்
திண்டுக்கல்லில் வசிக்கும் சந்துரு என்ற இளைஞர் சாதிமதம் பார்க்காமல் அனைத்து தரப்பினருடனும் நல்லிணக்கத்துடன் பழகக்கூடியவர் .இவருக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் பேர் உண்டு . விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது அதை போட்டோ எடுத்துள்ளார் . இதைப்பார்த்த இந்துமுன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் காவி குண்டர்கள் '' வீடியோ எடுத்து துலுக்கனுக்கு கொடுக்கிறியா !! எனக்கூறி அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் .
சந்துருவின் அண்ணன் சுரேஷ் . இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை இந்துமுன்னணி நகரப் பொறுப்பாளராக இருந்தவர் . இவர் சித்தப்பா கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மனக்கசப்பினால் இந்துமுன்னனியில் இருந்து வெளியேறி விட்டார் .
தன்னுடைய தம்பி சுரேஷை சங்கர்கணேஷ் தலைமையிலான காவி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை அறிந்து சென்ற 19.9.2016 அன்று தன் நண்பரான ஜெயக்குமாருடன் சேர்ந்து சங்கர் கணேஷை வழிமறித்து வெட்டியுள்ளார் .இந்த வழக்கில் சுரேஷ் ஜெயக்குமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சொந்தப்பகை காரானமாக நடந்த இந்த சம்பவத்தை காவி பயங்கரவாதிகள் மதச்சாயம் பூசி இஸ்லாமியர்கள் தானிந்த தாக்குதலை நடத்தியதாக மறியல் கடையடைப்பு செய்தார்கள் . அவர்களின் நெருக்கடி காரணமாக சந்துருவின் நண்பர்களான ஆஷிக் மாலிக் ஆகியோரையும் போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர் .
எப்படியாவது திண்டுக்கல்லை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடைய காவிக்கும்பல் திட்டமிட்டனர் . கோவையில் சசிகுமார் கொலை செய்யப்பட்ட அன்று நள்ளிரவு திண்டுக்கல் நேதாஜி நகர் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தை தூண்ட சதி செய்துள்ளனர் .முஸ்லிம்கள் அமைதி காத்ததால் அவர்களின் திட்டம் பலிக்கவில்லை .
எப்படியாவது கலவரத்தை நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று [ஞாயிறு] அதிகாலை திண்டுக்கல் பாஜக அலுவலகத்திலும் மாவட்ட நிர்வாகி கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசி முஸ்லிம்கள் இதனை செய்ததாக பழி போட்டுள்ளனர் . கடந்தகாலங்களில் விளம்பரத்துக்காகவும்­ போலீஸ் பாதுகாப்புக்காகவும் கலவரத்தை தூண்டவும் சொந்த வீட்டிலும் சொந்த அலுவலகத்திலும் பாஜக இந்துமுன்னணி நிர்வாகிகளே பெட்ரோல் குண்டு வீசி முஸ்லிம்கள் மீது பழி போட்ட சம்பவங்கள் நடைபெற்றதால் போலீசார் அவர்களின் நாடகத்தை உடனடியாக நம்பாமல் தீர விசாரித்து வருகிறார்கள் .
இஸ்லாமிய இளைஞர்களே ! உங்களை கோபமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு கலவரத்தை நடத்திட காவிகள் பல்வேறு சூழ்ச்சிகள் செய்கிறார்கள் . நீங்களும் ஆத்திரப்பட்டு பதில் நடவடிக்கையில் இறங்கி அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர்கள் .. பொறுமையாக இருங்கள் .இறைவன் சூழ்ச்சிக்காரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் . பொறுமையாக இருந்து இறைவனின் துணை கொண்டு அவர்களின் சூழ்ச்சியை முறியடிப்போம் -- அந் நதிா்