ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நாளிதழ் பயங்கரவாதிகளை அறிந்துகொள்ளுங்கள்..!!


இதைவிட என்ன பெரிய ஆதாரம் வேண்டும்?நாளிதழ்கள் காவிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதற்கு.
நேற்றைய தினம் சசிகுமார் இறப்பிற்காக கோவையில் வன்முறை வேட்டையாடிய இந்து முன்னனியின் அடாவடித்தனங்கள் கிராஸ்கட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த செய்தியை இன்றைய காலை நாளிதழ் ஒன்று எவ்வாறு வெளியிட்டுள்ளது என பாருங்கள்.
*வண்டி எண் மறைக்கப்பட்டுள்ளது.
காரணம் அந்த எண்ணின் மூலம் அதனுடைய உரிமையாளர்களை கண்டுபிடித்து கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக.
*வண்டியில் அமர்ந்திருக்கும் நபரின் முகமும் மறைக்கப்பட்டுள்ளது.
வன்முறையாளனை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிட கூடாது என்கின்ற காரணத்திற்காக.
*இந்து முன்னனியினர் தான் முழுக்க முழுக்க கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை தெரிந்தும் ஸ்கூட்டரில் சென்ற கும்பல் என பொத்தாம்பொதுவாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற செய்தி நாளிதழ்கள் வாங்குவதை புறக்கணித்து அவர்களுடைய நிறுவன உரிமத்தை ரத்து செய்தால்தான் வருங்காலத்தில் இதுபோன்ற செய்தி ஊடகங்கள் திருந்தும்.