செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாணவர் அமைப்புகள் ஒன்றுகூடியது கோவையை பாதுகாக்க...

மாணவர் அமைப்புகள் ஒன்றுகூடியது
கோவையை பாதுகாக்க...
/////////////////////////////////////////////////////////////////////
இந்திய மாணவர் சங்கத்தின்(#SFi) சார்பாக அமைதியை கோவையில் நிலைநாட்ட வலியுறுத்தி மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு மாணவர் அமைப்புகள் பங்குபெற்றன. இக்கூட்டத்திற்கு #SiO வின் மாவட்ட செயலாளர் திரு.சபீர் அகமது M.Sc.,(B.Ed.,) அவர்கள் தலைமை தாங்கினார். தொடர்ந்து கோவையில் நடைபெற்ற வன்முறைகளை முன்வைத்து கூட்டத்தின் தீர்மானங்களை #RSF தோழர் முன்மொழிந்தார், அதனை #CFi தோழர்கள் வழிமொழிந்தனர்.
பிறகு #SFi தோழர் திரு.ராஜேந்தின் அவர்கள் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் கோவை கலவரத்தை குறித்தும், அதனை தொடர்ந்து மாணவர்கள் செய்ய வேண்டியவற்றை குறித்தும் கருத்துரை வழங்கினர்.
இறுதியாக #RSF தோழர் திரு.ஜெகன் நன்றியுரை வழங்கினார்.
#SFi
#AiSF
#SiO
#CFi
#RSF
#திராவிடர்_மாணவர்_கழகம்
#சுயமரியாதை_மாணவர்_இயக்கம்
#சமத்துவ_மாணவர்_கழகம்