வெள்ளி, 23 செப்டம்பர், 2016

முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் நடத்த இந்துத்துவா திட்டமா ?

கோவையில் மீண்டும் முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் நடத்த இந்துத்துவா திட்டமா ?
1997 நவமபர் 27 காவலர் செல்வராஜ் கொலைக்கு பின் மிக பெரிய கலவரம் நடத்தி 19 முஸ்லீம்கள் படுகொலை , ஆயிரம் கோடி ரூபாய் முஸ்லீம் சொத்துகள் சூரையாடல் என நடத்தி முடித்த கலவர காயங்கள் இன்னும் ஆராத சுழ்நிலையில் மீண்டும் கலவரம் நடத்த
திட்டம் தீட்டி வந்த சுழ்நிலையில் இந்து முன்னணியின் கோவை செய்தித் தொடர்பாளர் கோவை சசிகுமார் நேற்றிரவு படுகொலை செய்யப்படுள்ளார் .
சசிகுமார் படுகொலை முதல் கட்ட விசாரனை ஆரம்பிக்காத நிலையில் குற்றவாளி முஸ்லீம்கள் தான் என ஏற்கனவே திட்டமிட்டு செயல் பட்டு வந்த இந்துத்துவா அமைப்பினர் முஸ்லீம்களை அடிப்பதும் , முஸ்லீம் கடைகளை உடைப்பதும் , பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதுமாக உள்ளனர் ..
இந்துத்துவா பயங்கரவாதிகளின் வன்முறை செயலை காவல்துறை தடுக்குமா ? அல்லது எப்போதும் போல முஸ்லீம்களை கைது செய்து இந்துத்துவா பயங்கரவாதிகளை சாந்தப்படுத்துமா என்பதே இந்திய தேசிய லீக் கட்சியின் கேள்வி ..
கோவை மாநகர ஆணையர் டாக்டர் திரு. அமல்ராஜ் நேர்மையான அதிகாரி நிச்சயம் நேர்மையாக நடவடிக்கை எடுத்து முஸ்லீம்களுக்கு எதிரான வன் செயலை தடுப்பது மட்டும் இல்லாமல் வன்முறை செயலில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளை தண்டிக்கவும் , இனி இது போன்ற வன் செயலை இரும்புகரம் கொண்டு தடுப்பார் என்ற நம்பிக்கை இந்திய தேசிய லீக் கட்சிக்கு உள்ளது ...
கடந்த சில மாதங்களாக பி.ஜே.பி , ஆர்.எஸ்.எஸ் , தலைவர்கள் தமிழ்நாட்டில் மத கலவரம் உண்டாக்க பெரும் முயற்ச்சி எடுத்து வருகின்றனர் சுவாதி படுகொலையை முஸ்லீம்கள் மீது திருப்பி கலவரம் நடத்த திட்டமிட்டனர் என்பது குறிப்பிடதக்கது ..
ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகத் சமிபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து இந்துத்துவா அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் நெல்லையில் இந்துத்துவா சிந்தனை கொண்ட கல்லூரிகளின் உரிமையாளர்களுடன் ஏதோ ஆலோசனை நடத்தி விட்டு சென்றவுடன் ஓசூரில் ஒருவர் கொலை , திண்டுகல்லில் ஒருவர் தாக்குதல் , இப்போது கோவையில் தலித் சமூகத்தை சேர்ந்த கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் நேற்றிரவு படுகொலை ...
தமிழக அரசு , காவல்துறை எப்போதும் போல முஸ்லீம்களை மட்டும் குற்றவாளியாக்க முயற்ச்சிக்காமல் இதில் மறைந்துள்ள இந்துத்துவா பாசிச சக்திகளின் சதியாட்டங்களை கண்டரிய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோருகின்றது ...
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக 2002 -ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம் எதிராக கொடூர படுகொலையை போல தமிழ்நாட்டில் நடத்துவோம் என இந்து முன்னனி தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் இவரின் பேச்சில் மறைதுள்ள சதியை காவல்துறை புலன்விசாரனை செய்து நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோருகின்றது ..

source: fb இந்திய தேசிய லீக்