வியாழன், 30 நவம்பர், 2017

அதானி சூரிய ஒளி மின்நிறுவன தீவிபத்தில் பொறியாளர்கள் 4 பேருக்கு பலத்த தீக்காயம்! November 30, 2017

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அதானி சோலார் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான சூரிய ஒளி மின்திட்ட பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு...

நிறையும் தென் தமிழக அணைகள்! November 30, 2017

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு அணைகளின்...

உருவானது ஓகி புயல்! November 30, 2017

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமாரி அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் ஓகி புயலாக மாறி மையம் கொண்டுள்ளது.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன், இந்த புயல் எதிராலியாக தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றார்.தென் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். கடலோர பகுதிகளில்...

மிதக்கும் குமரி... தவிக்கும் மக்கள்... குளிர்கிறது தென் தமிழ்நாடு! November 30, 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதிவேக காற்றின் காரணமாக,  500க்கும் மேற்பட்ட  மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே , இடலாக்குடி  அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து...

கனமழையால் முடங்கிய கன்னியாகுமரி மாவட்டம்! November 30, 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக, 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே,...

வன்மமான ஒரு கேள்விக்கு

#தலைமைநீதிபதி : அரசு செலவில் தொடர்ந்து படிக்க விரும்பறயாம்மா ? #ஹதியா: ஆம் நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். ஆனால் என் கணவரால் என்னை எதுவரைக்கும் வேண்டுமானாலும் படிக்கவைக்க முடியும் என்பதால் நீங்கள் சொல்லும் அரசு உதவி எனக்கு தேவையில்லை. #ஹதியா thanks fb Lakshmanasamy Odiyen Rangasamy ...

​அழிவின் விளிம்பில் அதிவேக சிறுத்தை! November 29, 2017

உலகிலேயே மிக விரைவாக ஓடும் விலங்கான சிறுத்தை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவின் கேப்பில் நடைபெற்ற ஒரு போட்டியில் பந்தயக் காரைவிட அதிவிரைவாக ஒரு சிறுத்தை ஓடியுள்ளது.பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் விலங்குகள் அழிவதைத் தடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சியாக இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஓடத் தொடங்கிய மூன்றே நொடிகளில் சிறுத்தை...

கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு! November 30, 2017

கே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் பொதுப் பணித்துறையின் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அணையின் முழுக் கொள்ளளவான 52 அடியில் 46 அடி நீர் உள்ளதால் உடைந்த மதகை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.  அணையில் தற்பொழுது உள்ள 51 அடி நீர், 31 அடியாக  குறைந்தால் மட்டுமே மதகை சரி செய்ய முடியும் என்பதால், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான...

​உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்பீர்களா? November 30, 2017

உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்பீர்களா அல்லது  தேசிய, மாநில கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன்  கூட்டணி வைத்தால் ஆதரிப்பீர்களா என கருத்து கணிப்பில் தமிழக புதுச்சேரி மக்களிடம்  கேட்கப்பட்ட கேள்விக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் ஜெயலலிதா காலமானதும், தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வில் இருப்பதும் தமிழக...

​தமிழகத்தின் அடுத்த எம்.ஜி.ஆர். யார்? November 30, 2017

நியூஸ் 7 தமிழ், குமுதம் இணைந்து நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில் எம்.ஜி.ஆர் விட்டு சென்ற வெற்றிடத்தை  அரசியலில் நிரப்ப போகும் நடிகர் யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்கள் வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட வாரியாகவும், இளைஞர்கள், படித்தவர்கள், சிறுபான்மையின மக்கள் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஒட்டுமொத்த...

போராட்டத்தை வாபஸ் பெற்றனர் செவிலியர்கள்..! November 30, 2017

செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதையடுத்து, செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சென்னை ஆவடியை சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசு மருத்துமனையில் பணிபுரியும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உடனே போராட்டத்திற்கு தடை விதிக்க...

​வானில் பறந்துகொண்டே விமானத்துக்குள் இறங்கிய விமானிகள்! November 29, 2017

சுவிட்சர்லாந்தில் செயற்கை இறக்கைகள் மூலம் வானில் பறந்த பிரான்ஸ் நாட்டு வீரர்கள் இருவர் வானில் பறந்தபோதே விமானத்துக்குள் இறங்கி சாதனை படைத்துள்ளனர்.சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு மேல் ஜங்க்பிரா மலைஎன்னுமிடத்தில் பிரெட்  புஜன், வின்ஸ் ரெபெட் ஆகிய இருவரும் பல முறை பயிற்சி மேற்கொண்ட பின் வெற்றிகரமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.விமானத்தில் இருந்த மற்றொரு விமானி இருவரையும்...

ஆன்லைன் முறையில் விவசாயிகளிடம் நூதன பணமோசடி..! November 30, 2017

தமிழகத்தில் ஆன்லைன் வரத்தகம் மூலம் நூதன முறையில் விவசாயிகளிடம் அரிசி, மிளகு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை பெற்று பணமோசடி செய்திடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த முறை மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து, திருவள்ளூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    வறட்சியால் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து...

மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்! November 30, 2017

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மணிமேகலை. இவர் கடந்த 24ம் தேதி, ஒவ்வொரு வகுப்பு தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ள...

அரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி! November 29, 2017

தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள புதுக்கோட்டை மாணவி, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்கினால், பல்வேறு சாதனைகள் புரிய முடியும் என தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வெண்ணிலா, மாவட்ட அளவிலான பல்வேறு சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று தொடர் வெற்றிகளை குவித்துள்ளார்.இந்நிலையில் திருச்செங்கோட்டில்...

புதன், 29 நவம்பர், 2017

காங்கிரஸ் அரசின் சாதனைகளைத் தான் இவான்கா புகழ்ந்ததாக ட்விட்டரில் சிதம்பரம் கருத்து November 29, 2017

இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா குறிப்பிட்டுப் பேசியது காங்கிரஸ் அரசின் சாதனை என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற இவான்கா, மோடியையும், இந்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்து பேசினார். அப்போது,...

அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை... November 29, 2017

அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி...

அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு November 29, 2017

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது, ➤மலேசியாவில் இருந்து இறக்குமதி...

​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்! November 29, 2017

கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் தொடர்ந்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவது வடகொரியா. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கொரிய...

இருதரப்பு மோதலால் பலியான இளைஞரின் உயிர்..! November 29, 2017

கடலூர் மாவட்டத்தில் இரு தரப்பு மோதலால் தீகுளித்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் அதே ஊரில் இருக்கும் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சிலம்பரசன்...

கமல் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017

நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், கமல் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்கள்...நடிகர் கமல் திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். இதற்கு ஆதரவாக 47 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கமலுக்கு வெற்றி வாய்ப்பு...

மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை - ஆய்வில் உறுதி! November 29, 2017

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து நெஸ்லே நிறுவனம், அதன் விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஷாஜகான்பூர் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.நெஸ்லே மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்குச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சோதனையில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை...

விஜய் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017

நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்கள்நடிகர் விஜய், திமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்....

குஜராத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ?

source: Vikatan EMagazin...

சேலம் வந்தார் கேரள மாணவி ஹாதியா! கணவரை பார்க்க முடியாதாம்.. கல்லூரி தாளாளர் கல்பனா!

சேலம்: மதம் மாறி திருமணம் செய்துக்கொண்ட கேரள மாணவி ஹாதியா சேலம் வந்தடைந்தார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநிதமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர...

செல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபர்..! November 29, 2017

சிவகங்கை மவட்டத்தில் செல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை பாரதிநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிச்சைமணி. இவரது மனைவி புவனேஸ்வரி, தனது 12 வயது மகன் முத்துப்பாண்டிக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக,  சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ஆதார் அட்டை எடுப்பதற்காக உதவி செய்வதாகக்...

ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள்..! November 29, 2017

மியான்மர் நாட்டில் ரோஹிங்கிய இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.மியான்மரில் வசித்துவரும் ரோஹிங்கியர்களை அந்நாட்டில் வசிக்கும் உரிமை இல்லை எனக்கூறி பல்வேறு ஆயுதக்குழுக்களால்  அமைப்புக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக நீடித்த  இது போன்ற செயல்களால்...

வெடிக்கும் அபாயத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை! November 29, 2017

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.  இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ஆகங் எரிலை கடந்த இரு மாதங்களாக சீற்றத்தை வெளிப்படுத்தி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்தது. இதனால் அந்த எரிமலையைச் சுற்றிலும் 8 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு...

தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்...! November 29, 2017

தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் என்கிற புதிய பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதவியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்து வரும் ரமேஷ் சந்த் மீனா மாற்றப்பட்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில்...