Home »
» நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்கள் கைது November 17, 2017
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை இன்றும் கைது செய்துள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், படகு ஒன்றில் நேற்று மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இலங்கையை ஒட்டிய பருத்திதுறை கடற்பரப்பில் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 10 பேரையும் கைது செய்த இலங்கைக் கடற்படை, மீனவர்களின் விசைப்படகையும் கைப்பற்றியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை நேற்று கைது செய்தது. இதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேலும், 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. 2 நாளில் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts:
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள் March 27, 2017
4 கைதிகளின் பெயர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சண்டிகரின், பொன்ட்சி சிறையின் கைதிகள் ரோஹித் பகரே, அனூப் சிங்உ, பலவாந் சிங் மற்றும்&n… Read More
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது சந்திரபாபு நாயுடுவின் நதிநீர் இணைப்புத் திட்டம்! March 27, 2017
ஆந்திராவின் நதிநீர் இணைப்பு திட்டமான “பட்டிசீமா நீர்பாசனத்திட்டம்” லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோத… Read More
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி March 27, 2017
அரசு ஊழியர்கள் தினமும் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டும் என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.&n… Read More
அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்களால் பல லட்சம் தண்ணீர் வீணாகும் அவலம்! March 27, 2017
கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை பெருமளவு பொய்த்துப் போனதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க தண்ணீர் கிடைக்காததா… Read More
உயிரைக் கொல்லும் பெல்லட் துப்பாக்கிகள், வேண்டாம் - உச்சநீதிமன்றம் March 27, 2017
காஷ்மீரில் போராட்டக்காரர்களை ஒடுக்க ,பெல்லட் துப்பாக்கிகளைத் தவிர்த்து, மாற்று வழிமுறைகளை பயன்படுத்துமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. … Read More