Home »
» காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு! November 4, 2017
காவிரி நதி நீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலத்தை, மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007, பிப்ரவரி 5-ம் தேதி தீர்ப்பு அளித்தது. எனினும், அத்தீர்ப்பை எதிர்த்து, இந்தப் பிரச்னையில் தொடர்புடைய தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அரசுகள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அண்மையில் முடிவடைந்தது. அதையடுத்து, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம், 2018, மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தற்போது காவிரி நதிநீர் மன்றத்தின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க 2018 மே 2 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
வரும் 13ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! March 02, 2019
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 13ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெர… Read More
விமானப் படையினரிடமிருந்து பணத்தை எடுத்து அம்பானிக்கு கொடுத்து விட்டார் பிரதமர் மோடி : ராகுல் காந்தி March 02, 2019
நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கும் விமானப் படையினரிடமிருந்து, ரூ.30,000 கோடி ரூபாயை எடுத்து, பிரதமர் மோடி அம்பானிக்கு கொடுத்துள்ளதாக,… Read More
வீடுகளுக்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடியவன் சிசிடிவி மூலம் பிடிபட்டான்! March 02, 2019
சென்னையில் வீடு புகுந்து 100 சிலிண்டருக்கு மேல் திருடிய திருடனை, போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர், அசோக் நகர… Read More
அபிநந்தன் டைம்லைன்: சிக்கியது முதல் விடுவிக்கப்பட்டது வரை....! March 02, 2019
Authors
பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கியது முதல் விடுவிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள்.
தாயகம்… Read More
எல்லைப் பதற்றத்தால் மக்களவைத் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? March 02, 2019
எல்லையில் பதற்றமான சூழல் நிலவினாலும் நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.&nbs… Read More