Home »
» மதுராந்தகம் ஏரிகரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய எரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் 21 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், முழு கொள்ளளவான 694 கன அடியை எட்டும் நிலையில் உள்ளது. 23.5 அடி உயரம் உள்ள இந்த ஏரியில், தற்போது 21 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து 5000 கன அடி உள்ளது. இதனால் ஏரியிலிருந்து உபரி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுவதால், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முருக்கச்சேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நிலைமையை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.
Related Posts:
ஏர்வாடி போலீஸ் கஸ்டடி மரணத்தை கண்டித்து
ஏர்வாடி போலீஸ் கஸ்டடி மரணத்தை கண்டித்து நேற்று இரவு முதல் இன்று மாலை வரை நீதிக்கான போராட்ட களத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், தமுமு… Read More
வாழை மருத்துவம்
மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.மலச்சிக்கல், மூலநோயால் அவதியு… Read More
'குர்பானி' மாடுகள் விவகாரம்... முன்னெச்சரிக்கை ஆர்ப்பாட்டம்..!
களம் கானும் TNTJ..!!
மாடு, மற்றும் மாட்டு இறைச்சி தொழில் செய்யும் வியாபாரிகளை அச்சுறுத்தி மாடுகளை திருடிச்சென்றும், நெல்லை, குமரி, தூத்துக்குடி,… Read More
மக்கள் என்னைக்குமே தெளிவு தான்.....
… Read More
பேரீச்சம்பழத்தின் 10 நன்மைகள்
பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீசு,பொட்டாசியம்,தாமிரம்,மக்னீசியம், இரும்புச்சத்து, விட்டமின் -A, விட்டமின் -B, விட… Read More