சனி, 13 ஜனவரி, 2018

​சாலையோர கடைகள் வைக்க இனி ஆதார் கார்டு கட்டாயம்! January 13, 2018

Image

சாலையோர கடைகள் வைக்க, இனி ஆதார் கார்டு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோர கடைகள் வைக்க அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது, விரைந்து முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாலையோர கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள், அதனை வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாக, மாநகராட்சி  தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடுத்து, இனி வரும் காலங்களில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்துவதை தடுக்கும் வகையில், உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டையை சமர்பிப்பது கட்டாயம் என்று நீதிபதி  உத்தரவிட்டார். மேலும், ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே கடைகள் அமைக்கக்கூடாது என்றும், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி  வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

Related Posts:

  • ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் … Read More
  • Quran பொய்ச் சத்தியம் செய்தல்.. இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப … Read More
  • 2G SPECTRUM: உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க 2G அப்டின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரிஞ்சத நான் சொல்லுறேன்.இப்பவாவது காதுகொடுத்து கேளுங்க ப்ளீஸ். ஆ.இர… Read More
  • Hadis: அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள். இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபி… Read More
  • Hadis ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்த… Read More