ஞாயிறு, 31 மார்ச், 2019

கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை!" - உயர்நீதிமன்றம் March 31, 2019

ns7.tv நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்கள் பணியாற்றிய பகுதிகளை தொலைதூர பகுதி, எளிதில் அணுக முடியாத...

கோவை சிறுமி கொலை வழக்கு : ஒருவர் கைது...! போலீசார் தீவிர விசாரணை! March 31, 2019

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 25-ம் ஆம் தேதி காணாமல் போனநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து...

குஜராத்திற்கு ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? - ஆர்.எஸ்.பாரதி March 31, 2019

தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹூவிடம் திமுக மனு அளித்தது.  சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, 45 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் காலியாக உள்ள நான்கு...

சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்! March 31, 2019

சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்துநொறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  சென்னை தலைமைச்செயலகத்ததை அடுத்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரமாக இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ரோந்து வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், கம்பால் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்தார். பின்பு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர்...

சனி, 30 மார்ச், 2019

பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்த 103 இயக்குநர்கள்! March 30, 2019

Authors ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு வாக்களிக்க வேண்டாம் என வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள சுமார் 100 இயக்குநர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள், மீண்டும் நரேந்திர மோடியை ஆட்சியில் அமரவைப்பார்களா...

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்! March 30, 2019

ஐஎன்எஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக இருந்ததாகவும்...

துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை! March 30, 2019

credit ns7.tv வேலூர் மாவட்டம் காட்பாடியில்  உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வந்தனர். அப்போது...

வெள்ளி, 29 மார்ச், 2019

பிரேசிலில் அழிவின் விளிம்பில் உள்ள அமேசானிய மனட்டீ உயிரினம்: இனப்பெருக்கத்துக்காக வனப்பகுதி ஏரியில் விடப்பட்டது

பிரேசில் நாட்டில் INPA - அமேசானிய ஆராய்ச்சி தேசிய நிறுவனம் கடந்த வாரம் அமேசானிய நீர்வழி பாலூட்டிகளின் திட்டத்தை நிகழ்த்தினர். இந்த நிறுவனம் இந்த அறிய வகை பாலுட்டியை பராமரித்து வருகிறது. கடத்த சில தினங்களுக்கு முன்னர் அமோனொனாஸ் மாநிலத்தின் பியகாகு-புருஸ் ரிசர்வ் பகுதியில் உள்ள ட்ராபினோ ஏரியில் இந்த அறிய வகை பாலூட்டியானா அமேசானியன் மனட்டியை இனவிருத்திக்காக அப்பகுதி ஏரியில்...

பறக்கும் படையிடம் கதறும் சிறு வியாபாரிகள்

நெல்லை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யார் பணத்தை கொண்டு சென்றாலும் அதற்குரிய ஆவணம் இல்லை என்றால் பறக்கும்படையினர் பறிமுதல் செய்கின்றனர். இது சிறு வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. சிறிய வியாபாரிகளுக்கு ஆவணங்கள் என்று பெரிய அளவில் கிடையாது. காய்கறி, பழம், பால் போன்றவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆவணம் இன்றி தாங்கள்...

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் 948 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 639 பேரின் மனு நிராகரிப்பு; சத்யபிரதா சாஹு பேட்டி

சென்னை: சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர...

கைக்கூலி செங்கோட்டையன் உளறியதற்கு

இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று BJPன் கைக்கூலி செங்கோட்டையன்உளறியதற்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன? பதிலளிப்பவர்:- கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் MISC இந்த வார கேள்வி பதில் நிகழ்ச்சி - (27-03-2019)...

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! March 29, 2019

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு...

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்தியா அளித்த ஆதாரங்களை நிராகரித்த பாகிஸ்தான்! March 29, 2019

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களில், 22 இடங்களிலும் தீவிரவாத முகாம்கள் இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத...

ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45! March 28, 2019

credit ns7/tv பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 29 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளும், 4 வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி...

புதன், 27 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்! March 26, 2019

பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின்  அண்ணனைக் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவாகரத்தில் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் அண்ணனை கும்பல் ஒன்று கடந்த மாதம் தாக்கியது....

கொள்கை பிடிக்காததால் பிரசாரம் செய்யவில்லை - சுப்பிரமணியன் சுவாமி March 27, 2019

பாஜகவின் கொள்கை பிடிக்காததால் பரப்புரை செய்யவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பது தவறு என்றும், தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனுக்கு நிலையான சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார். பாஜக தனித்துப் போட்டியிடுவதையே...

செவ்வாய், 26 மார்ச், 2019

இரண்டு கொலை 22 கற்பழிப்பு!!!!

...

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....’ அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகுல்! March 26, 2019

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 6000 செலுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். "குறைந்தபட்ச உத்தரவாத திட்டத்தின் கீழ் 25 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி கிடைக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் ஐந்து கோடி குடும்பங்கள்...

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்! March 26, 2019

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நேற்று வரை 604 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அடுத்த மாதம் 18ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 22...

5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ள வேட்பாளர்களின் சொத்து மதிப்பு! March 26, 2019

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில், பலரது சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.  சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில் அசையும் சொத்து என 24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 168 ரூபாய் எனவும் அசையா சொத்துகள் 22...

திங்கள், 25 மார்ச், 2019

நார்வே நாட்டில் என்ஜின் கோளாறால் நடுக்கடலில் தள்ளாடிய சொகுசு கப்பல்! March 25, 2019

source ns7.tv நார்வே நாட்டில், நடுக்கடலில், என்ஜின் கோளாறால் பேரலையில் சிக்கி தள்ளாடிய சொகுசு கப்பிலில் இருந்து 1,300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். துரித கதியில் பயணிகளை மீட்ட, மீட்புக்குழுவுக்கு நார்வே பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நார்வே நாட்டின் ஹஸ்டர்ஸ்விகா பே பகுதியில் இருந்து, எம்.வி.வைகிங் ஸ்கை என்ற சொகுசுக் கப்பல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...

ஞாயிறு, 24 மார்ச், 2019

அயோத்தி விவகாரம் தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர ஆலோசனை...! March 24, 2019

அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிக்க, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அவசர கூட்டத்தை நடத்தியது. லக்னோவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாரியத்தின் 51 உறுப்பினர்கள் மட்டுமின்றி, மத்திய வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண்பதற்காக மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம்...

நியூசிலாந்து பிரதமரிடம் பாடம் படிக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்!

நியூசிலாந்து பிரதமரிடம் பாடம் படிக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள்! செய்தியும்! சிந்தனையும்! (20-03-2019) பா.அப்துல் ரஹ்மான்(மாநிலத் துணைத் தலைவர்-TNTJ...

சனி, 23 மார்ச், 2019

விதிகளை மீறியதாக கூறி ஓலா கேப் சேவைக்கு தடை விதித்துள்ளது கர்நாடக அரசு! March 23, 2019

credit ns7.tv அரசின் விதிகளை மீறிய ஓலா கேப் சேவைக்கு ஆறு மாதங்கள் தடை விதித்து கர்நாடகா அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   கார் மற்றும் ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கவே ஒலா நிறுவனத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வரும் 2021ம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இந்நிலையில், ஓலா சட்டவிரோதமாக இருசக்கர...

கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...! March 23, 2019

சென்னையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்தாண்டு HIV ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு நேற்று  விசாரணைக்கு...

கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்! March 23, 2019

Authors ஹரியானாவில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை அப்பகுதிவாசிகள் சிலர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் உலா வர, இந்தியா முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. கம்பு, இரும்பு கம்பிகள் கொண்டு...

வெள்ளி, 22 மார்ச், 2019

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு? March 22, 2019

வக்ஃபு வாரிய கல்லூரி முறைகேடு தொடர்பாக, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சென்னை மண்ணடியில் வக்ஃபு வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மதுரையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான கல்லூரி மதுரை கே.கே.நகரில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்...

வியாழன், 21 மார்ச், 2019

உலகின் மிக மகிழ்ச்சிகரமான நாடு எது தெரியுமா? March 21, 2019

credit ns7.tv உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தையும், இந்தியா 140வது இடத்தையும் பிடித்துள்ளன. ஐநாவின் சார்பு நிறுவனமான ''Sustainable Development Solutions Network'' 2019ம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனி நபர் வருமானம், ஆரோக்கிய வாழ்வின் அத்தியாவசிய தேவைகள், சமூக சுதந்திரம், ஊழலின்மை ஆகியவற்றை அடிப்படையாக...

தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசாணை! March 21, 2019

சென்னை உள்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பேரிடர் மற்றும் வருவாய் துறை சார்பில் மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில், அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல்...

45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்றுத்தரும் நெசவாளர்...! March 21, 2019

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கு 45 நாட்களில் கைத்தறி தொழிலை கற்பித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வரும் நெசவாளர் காரப்பனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கை அசைவுகள் ஏதும் இன்றி கால்களை மட்டுமே பயன்படுத்தி நெசவு செய்யும் வகையில் தறியினை கண்டு பிடித்து அதன் மூலம் பெண்களுக்கு காரப்பன் பயிற்சி அளித்து வருகிறார். இவரின்...

நியூசிலாந்து தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை நாட்டை விட்டு வெளியேற்றிய துபாய் அரசு! March 20, 2019

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ஆதரிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை பணி நீக்கம் செய்ததுடன் நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது துபாய் அரசு! கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து அங்கு வழிபாட்டில் இருந்தவர்கள் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில்...