செவ்வாய், 26 மே, 2020

தொழிலாளர்களை பிற மாநிலங்களில் பணிக்கு அழைக்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பிற மாநிலங்களில் பணிக்கு அழைக்கும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக பல மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இனிவரும் காலங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பிற மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் வேலைக்கு அழைக்கும் போது, உத்தரப்பிரதேச மாநில அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் மோசமாக நடத்தப்படுவதை விரும்பவில்லை எனவும், அவர்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Related Posts:

  • உடலுக்கு உகந்த பாகற்காய்! பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு&… Read More
  • prostate cancer: Here are 12 symptoms which shouldn’t be ignored and can be linked with prostate cancer: Problems with urinating and in some situations –problems … Read More
  • பூண்டு உணவில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இதனால், வாயு சம்பந்தமான நோய் நிவர்த்தி அடைகிறது. பூண்டைத் துவையல் செய்தும் சாப்பிட்டு வரலாம். இரத்தக்… Read More
  • நாவல் பழத்தின் மருத்துவக் குணங்கள் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயால் பலரும் பாதிக்… Read More
  • செவ்வாழை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோ… Read More