ஞாயிறு, 24 மே, 2020

திருமாவளவன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு: உதவிப் பேராசிரியர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு செய்தியை வெளியிட்ட உதவி பேராசிரியரை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கைது செய்தது.
30 வயது நிரம்பிய அவர் ,நாகப்பட்டினம் பொறையார் அருகே அமைந்திருக்கும் தில்லையடி கிராமத்தில் வசித்து வருவதாகவும்,  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

நாகப்பட்டின மாவட்ட அளவிலான வி.சி.க தலைவர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
credit indianexpress.com