சனி, 23 மே, 2020

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிங்கேஸ்வரன், சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  
இதேபோல், விழுப்புரம், சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.