சனி, 23 மே, 2020

ஆம்பன் புயல் பாதிப்புக்கான பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை: மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆம்பன் புயலால், மேற்குவங்கம் உருக்குலைந்த நிலையில், டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் பயணித்தவாறு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் சென்றார்.  இதையடுத்து மேற்குவங்கத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதைஅடுத்து, புயல் சேதம் குறித்தும் தேவைப்படும் நிதி உதவிகள் குறித்து, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒடிசா புயல் நிவாரணத்திற்காக முதற்கட்ட நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். 
இதனிடையே, பிரதமரின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி, அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் முன் பணம் என்று கூறும் அதே நேரம், இது மொத்த தொ​கையாகவும் இருக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஆம்பன் புயலால், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Posts:

  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • தொடரும் கொலை தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சி… Read More
  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More