ஞாயிறு, 31 மே, 2020

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

நாசாவை சேர்ந்த இரண்டு வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவன ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நாசாவுடன் இணைந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது.

9 ஆண்டு கால முயற்சிக்குப் பின் நாசாவை சேர்ந்த  ராபர்ட் பென்கன் மற்றும் ஹர்லி ஆகிய விண்வெளி வீரர்களுடன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 என்ற ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இதில் சென்ற இரு வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நாளை அடைவார்கள் என்றும் அங்கு அதிகபட்சம் 2 மாதங்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.