வெள்ளி, 22 மே, 2020

சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்!

சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். 
இந்த கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொள்ளும் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் உறுதிப்படுத்தியுள்ளார்.