ஞாயிறு, 24 மே, 2020

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்!

இன்று காலை 10 மணிக்கு திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டது, விபி துரைசாமி திமுகவில் இருந்து விலகியது, திமுக எம்பி தயாநிதி மாறன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தது என அந்த கட்சியை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் கூறப்படுகிறது. அதே போன்று காணொலி வாயிலாக மாவட்டச்செயலாளர்களுடன் பேசவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரத்தில், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை மு.க. ஸ்டாலின் முன்வைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்