வெள்ளி, 16 செப்டம்பர், 2016

கோவில் பணிக்காக கோரிக்கை வைத்து தமிழக அரசிடமிருந்து முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ 53 லட்சம் பெற்றுத்தந்தார்


கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பண்பொழி அருள்மிகு திருமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலுக்கு சாலை, மின்விளக்குகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ எம் முஹம்மது அபூபக்கர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தமிழக அரசு ரூபாய் 53 லட்சம் ஒதுக்கி உள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா எதிர் வரும் 17.09.2016 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம் முஹம்மது அபூபக்கர் அவர்களை கோவில் நிர்வாக அதிகாரி தலைமையில் குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் ் நேரில் சந்தித்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு கொடுத்தனர்

Related Posts: