சனி, 11 ஜனவரி, 2020

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் 9,247 கோடி ரூபாய் வரை இழப்பு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் 9 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஒன்று இந்தியாவில்  இணைய சேவை முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் தற்போது வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அதுபோல குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்த போது வடகிழக்கு மாநிலங்களில் இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இது போன்ற இணைய சேவை முடக்கங்களால், பல்வேறு துறைகளில் 9 ஆயிரத்து 247 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 196 மணி நேரத்திற்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

credit ns7.tv

Related Posts:

  • மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வு… Read More
  • பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola ...... தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த… Read More
  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • அவசியம் பகிருங்கள் ஆபத்தான குரேட்ரன்ஸ் செடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் Friends be Careful.... Know the Fact... If you… Read More
  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More