ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதில் தகராறு: வரிசையில் நிற்கச் சொன்னவரைத் தாக்கிய காவலர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த காவலாளரை வரிசையில் நிற்க சொன்ன வாடிக்கையாளர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Periyakulam atm
தேனி மாவட்டம் பெரியகுளம் கம்பம் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக ரபீக் என்பவர் வரிசையில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர் பணம் எடுக்க வரிசையில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. வரிசையில் வருமாறு ரபீக் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவலர் ரபீக்கை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரபீக் தகவல் தெரிவிக்க, அவரது உறவினர்கள் அங்கு கூடினர். அங்கு சென்ற தென்கரை காவல் துறையினர் கூடியிருந்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.