வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு..!!!


சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்களிடம் பேசும்போது சொன்ன தகவல் இது..
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S T R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை,
நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார்.
நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம்.
ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும்.
மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.
அதனை S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது),
TALK (பேச சொல்வது),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)
போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.
அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமே...
தகவல் நன்றி :- நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்

Related Posts:

  • டாப் 10 அம்சங்கள் வருமாறு:- 1) ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வருமானம் உள்ளோருக்கு 10%லிருந்து 5%ஆக வரி குறைப்பு 2) ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானத்திற்கான வரி மீ… Read More
  • ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணபரிமாற்றத்துக்கு தடை ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணபரிமாற்றத்துக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 2017-18ம் ஆண்டுக… Read More
  • பட்ஜெட் தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் விலை உயருகிறது மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.… Read More
  • யாருக்கு எவ்வளவு வரி? நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படி யாருக்கு எவ்வளவு வரி என்பதைப் பார்க்கலாம். * ஆண்டு வருமானம்… Read More
  • அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகள் ஒருவருடமிருந்து ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். அவர் தனது பட்ஜெட்… Read More