வெள்ளி, 27 டிசம்பர், 2019

இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் பொய் கூறுகிறார் - ராகுல் காந்தி

Image
இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்று பிரதமர் மோடி பொய் கூறுவதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.  
டெல்லியில் கடந்த 22ஆம் தேதி நடந்த பொதுகூட்டத்தில், இந்தியாவில் தடுப்பு மையங்களே இல்லை என்றும், காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்கள் இதுகுறித்து வதந்திகளை பரப்பி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இந்நிலையில், தடுப்பு மையங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ், பிரதமர் மோடி, பாரத மாதாவிடம் பொய் கூறுகிறார் என ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அஸ்ஸாமில் தடுப்பு மையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான வீடியோவையும்,  டெல்லி பொது கூட்டத்தில் தடுப்பு மையங்கள் குறித்து பிரதமர்  மோடி பேசிய வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார்.

credit ns7.tv