ஞாயிறு, 29 டிசம்பர், 2019

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது....!

Image
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றிவளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை கைது செய்த அவர்கள், 3 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv