செவ்வாய், 31 டிசம்பர், 2019

NRC விவகாரத்தில் சோனியா காந்தி அமைதி காப்பது ஏன்?

Image
ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதற்காக அமைதி காக்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்தவரான பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் மிகவும் பரிட்சயமானவரே. தேர்தல் வியூகத்திற்கு பெயர் போனவரான இவரை, தங்களுக்காக பணியாற்ற வேண்டுமென அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரஷாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் தற்போது நாட்டின் மிகவும் பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசியுள்ளார்.
பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிடாதது ஏன் எனவும் போராட்டங்கள், தர்ணாக்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருந்தாலும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் தெளிவு பிறந்திருக்கும் இருப்பினும் சோனியா NRC தொடர்பாக அறிக்கை வெளியிடாதது ஏன் என்பது புரியவில்லை என்றும் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று தாங்கள் ஆளும் முதல்வர்களை அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
10க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் NRCயை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் காரியக் கமிட்டிக்கே அதிக அதிகாரம் உள்ளது, மாநில முதல்வர்களுக்கு முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கிடையாது.
குடியுரிமை திருத்த சட்டம் 2003ல் உருவாக்கப்பட்டது; 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், இது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றால் அதனை திருத்த காங்கிரஸுக்கு வாய்ப்பு இருந்தது என்று கூறினார்.
மேலும் தேசிய மக்கள் பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பு கிடையாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதில் உடன்பாடு இல்லை என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் படியே மக்கள் தொகை பதிவேடு தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

credit ns7.tv

Related Posts:

  • வக்கீல்கள் & மதிக்க மாட்டீகிறார்கள் சாதாரண 8,10 வது படித்த போலிஸ் கான்ஸ்டேபிள் ,ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ல டிகிரி முடித்த எஸ்.ஐ ,இன்ஸ்பெக்டர் கள் எல்லாம் ,.5 வருடம் சட்டம் படித்த நோபல… Read More
  • India in 1835 Minute by the Hon'ble T. B. Macaulay, dated the 2nd February 1835.         [1] As it seems to be the opinion of s… Read More
  • குடும்ப அட்டை குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும்… Read More
  • ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. கருப்புப் பண சாமியார் பாபா ராம்தேவின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட 'பதஞ்சலி பசு நெய்' என விளம்பரம் செய்து ஏமாற்ற… Read More
  • கொய்யா பழம் நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு ப… Read More