வெள்ளி, 27 டிசம்பர், 2019

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!

Image
இந்தியர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என பாஜக நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இயக்கம் சார்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், ஜவாஹிருல்லா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தாலும், நாட்டின் பொருளாதாரம் பற்றி எல்லாம் கவலைப்படாமல், முத்தலாக் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். 
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் மீண்டும் சாதிய பாகுபாடு தலைதூக்கும் என்றும் குறிப்பிட்டார். 
credit ns7.tv