வெள்ளி, 27 டிசம்பர், 2019

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: பிரதமர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Image
தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும், என அமித்ஷா கூறியுள்ள நிலையில், அத்தகைய திட்டம் ஏதுமில்லை என பிரதமர் மோடி கூறுவது, மக்களை திசைதிருப்புவதாக உள்ளதென திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அனுமதியின்றி நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பான வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டனர். பின்னர் பேட்டியளித்த அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை, ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும், என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதுபோல திட்டம் ஏதுமில்லை, என பிரதமர் மோடி கூறியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல், என்றும் கூறினார். மேலும், நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

Related Posts:

  • பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள் மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு ரகசியமாக ச… Read More
  • Quran யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - அதுவே நேர்வழி … Read More
  • Hadis மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்… Read More
  • இந்தி வெறி மோடி அரசு. தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் … Read More
  • சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? அவற்றை சரி செய்ய எளிய இயற்கை மருத்துவங்கள் :- சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? அவற்றை சரி செய்ய எளிய இயற்கை மருத்துவங்கள் :- கை விரல்கள் போலல்லாமல் கால் நகங்கள் நிறைய பேருக்கு அழுக்கடைந்து, உடை… Read More