புதன், 18 டிசம்பர், 2019

போலியை நம்ப வேண்டாம்.

வாட்ஸ் அப் செயலியை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அது பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் வாட்ஸ் அப் பயனர்கள் அனைவரும் இந்த செய்தியை உடனடியாக தங்கள் Contact List-ல் உள்ளவர்களுக்கு அனுப்பவேண்டும் என நியூஸ்7தமிழின் பெயரில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ, கடந்த 2019ம் ஆண்டு, ஜூலை 4,ம் தேதி வாட்ஸ் அப்பில் உலா வரும் போலி செய்திகள் குறித்து பதிவிடப்பட்டது. அதில் இருந்து சிறு பகுதியை மட்டும் Edit செய்து, நியூஸ்7தமிழின் பெயரில் சிலர் பரப்பி வருகின்றனர். நியூஸ்7 தமிழின் பெயரில் போலி புகைப்படங்களும், போலி வீடியோக்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் உலா வருகின்றது. இந்நிலையில், தற்போது உலா வரும் செய்தியை மக்கள் உண்மை என நம்பி அதிகம் பகிர்ந்துவருகின்றனர். 
நியூஸ்7தமிழ் பதிவேற்றிய வீடியோ:
உண்மையான செய்தியை அறிந்திட, நியூஸ்7தமிழின் அதிகாரப்பூர்வமான இணையப் பக்கத்தை மட்டும் பின் தொடருங்கள். போலியை நம்ப வேண்டாம்.
பொறுப்பும் பொதுநலனுடன், நியூஸ்7தமிழ்.

credit ns7.tv