வியாழன், 7 மே, 2020

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு: குழந்தை உள்பட 10 பேர் உயிரிழப்பு!

Image
விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலை ஒன்றில் காலை 3 மணி அளவில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவால் குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாயுக் கசிவால் அந்தப் பகுதியில் இருந்த 1000க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
ரசாயன வாயுக் கசிவால் அந்த ஆலையை சுற்றி இருந்த சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த வாயுக் கசிவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக அவர் விசாகப்பட்டினம் செல்லவிருக்கிறார்.
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் வாயு கசிவு நடந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடம் பேசியுள்ளதாகவும், ஆந்திர மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்து தர ஜெகன் மோகன் ரெட்டியிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்த்து அனைவரும் போராடி வரும் நிலையில், விசாகப்பட்டினம் வாயுக் கசிவு சம்பவம் அம்மாநில மக்களுக்கு மேலும் ஒரு துயரமாக அமைந்துள்ளது.
credit ns7.tv

Related Posts:

  • முருங்கை மகத்துவம்..! முருங்கை வேரின் மருத்துவ குணம் முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்ப… Read More
  • Hadis ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அ… Read More
  • 37 பேர்கள் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை..********… Read More
  • விசாரணை கைதிகளாக முஸ்லிம்கள ஒரு சோகக் கணக்கு... இந்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி ராஜ்ய சபையில் தாக்கல் செய்த ஒரு அறிக்கை முஸ்லிம்கள சிறைவாசம் குறித்து தெரிய… Read More
  • சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யு… Read More