வெள்ளி, 31 ஜூலை, 2020

ஹஜ் பயணம் 2020 எப்படி வேறுபட்டது?

ஹஜ் பயணம் – இஸ்லாமிய நம்பிக்கையில் ஐந்து கடமைகளில் ஒன்று – அது இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஹஜ் பயணம் தொடங்கிய பின்னர், சில ஹஜ் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து காபாவைச் சுற்றி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த இடத்தை லட்சக் கணக்கானவர்களால் நிரம்பியிருக்கும்.

மாறாக, தொற்றுநோய் காரணமாக, கலந்துகொண்ட பக்தர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 1,000 உள்ளூர் வாசிகள் மற்றும் வெளிநாட்டினர் கலந்துகொண்டனர்


சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பிறகு, மெக்கா ஆட்சி தொடங்கியதில் இருந்து வருடாந்திர புனிதப் பயணத்துக்காக முஸ்லீம் புனிதப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை சவுதி அரேபியா நிறுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளை குறைப்பதற்காக சவுதி அரசாங்கம் கடுமையான சமூக இடைவெளி விதிகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், சவுதி தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட புனித பயணிகளின் அனைத்து பயண, தங்குமிடம், உணவு மற்றும் சுகாதார செலவுகளையும் அது உள்ளடக்கியுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 2.7 லட்சம் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் 2,800 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஹஜ் பயணம் ஏன் முஸ்லிம்களுக்கு முக்கியமானது?

ஹஜ் பயணம் இஸ்லாத்தின் முக்கிய தூண் ஆகும். வாழ்நாளில் ஒரு முறையேனும் அனைத்து முஸ்லிம்களும் ஹஜ் பயணம் செய்ய வேண்டும். அது கடந்த கால பாவங்களைத் துடைப்பதற்கும் கடவுளுக்கு முன்பாக புதுவாழ்க்கையைத் தொடங்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

புனித பயணத்தின்போது, முஸ்லிம்கள் நபிகள் நாயகம் நடந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். மேலும் நபிகள் இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் (ஆபிரகாம் மற்றும் இஸ்மவேல் பைபிளில் பெயரிடப்பட்டுள்ளது) தொடர்பான சடங்குகளையும் பின்பற்றுகிறார்கள்.

உடல் ரீதியான சிரமங்கள் இருந்தபோதிலும், பலரும் கரும்பு மற்றும் ஊன்றுகோல்களை நம்பியுள்ளனர். அவர்கள் பாதைகளில் நடக்க வலியுறுத்தப்படுகிறார்கள். ஹஜ் பயணம் செய்ய முடியாதவர்களுக்கு சில சமயங்களில் தொண்டு நிறுவனங்கள் அல்லது சமூகத் தலைவர்களால் நிதியளிக்கப்படுகிறது. மற்றவர்கள் பயணத்தை மேற்கொள்ள தங்கள் வாழ்க்கை முழுவதும் சேமிக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் 2020ம் ஆண்டில் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்திருந்தனர். மேலும், சிறுபான்மை விவகார அமைச்சகம் ஜூன் மாதத்தில் விண்ணப்பதாரர்கள் டெபாசிட் செய்த அனைத்து பணத்தையும் முழுமையாக திருப்பித் தருவதாக அறிவித்தது.

ஹஜ் 2020க்கான பயணிகள் யார்?

பங்கேற்பாளர்கள் ஒரு ஆன்லைன் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு உள்ளூர்வாசிகள் என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் வைரஸ் அல்லது நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாமல், 20 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு முன்பு புனிதப்பயணம் செய்யாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பயணிகள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், மெக்காவில், பயணிகள் ஹோட்டல்களில் நான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஏ.பி செய்தி நிறுவன அறிக்கையின்படி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் 20 பேர் கொண்ட சிறிய குழுக்களாக சென்று கிராண்ட் மசூதியில், அவர்கள் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

தொடர்பு தடமறிதலுக்காக, சவுதி அதிகாரிகள் ஹஜ் பயணிகளுக்கு கைப்பட்டைகளை வழங்கியுள்ளனர். அவை அவர்களுடைய போன்களுடன் இணைத்துள்ளனர். இதனால் அவர்களின் இயக்கத்தை கண்காணிக்க முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை புனிதப் பயணம் முடிந்த பிறகு, பங்கேற்பாளர்கள் மீண்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹஜ் பயணிகள் தங்கள் ஹோட்டல் அறைகளில் தனியாக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவார்கள். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பேக் செய்யப்பட்ட ஜாம்சாம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட புனித நீரை உட்கொள்வார்கள். அவர்களுக்கு சொந்தமாக பிரார்த்தனை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்கு சில்வர் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு உடைகள் வழங்கப்படுகின்றன, அவை பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுவதாகவும் தண்ணீர் புகாமல் தடுப்பதாகவும் சவுதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

சாத்தான் மீது கல்லெறிதல் விழாவும் வித்தியாசமாக இருக்கும். புனிதப் பயணிகள் வழக்கமாக ஹஜ் வழித்தடங்களில் சாத்தானைக் குறிக்கும் தூண்களில் எறிவதற்காக கூழாங்கற்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டு அவர்கள் முன்பே தூய்மை செய்யப்பட்ட கூழாங்கற்களைப் பெறுவார்கள்.