புதன், 22 ஜூலை, 2020

கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இஸ்லாமிய இளைஞர்கள்!

Image

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் தந்தையை, கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்ய இஸ்லாமிய இளைஞர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எல்லிஸ்நகர் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனையடுத்து தந்தை தான் இறந்தால் தனது உடலை கிறிஸ்துவ முறைப்படி இறுதிசடங்கு நடத்த வேண்டும் என ஏற்கனவே தந்தை வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவிதமாக இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த வழிகாட்டுதலோடு இறந்த தந்தையின் உடலை பெற்ற பெண் மருத்துவருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் உதவி செய்து உயிரிழந்த நபரின் உடலை உரிய பாதுகாப்புடன் எடுத்துவந்து தத்தனேரி பகுதியில் கல்லறையில் கிறிஸ்துவ முறைப்படி இறுதிசடங்கு நடத்திய பின்னர் அவரது உடலை முறைப்படி அடக்கம் செய்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு உறவினர்களே செல்ல அஞ்சும் இது போன்ற சமூகசேவைகளில் ஈடுபடுவதோடு இறந்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற உதவிய இளைஞர்களின் செயல்கள் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.