வெள்ளி, 24 ஜூலை, 2020

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி!

Image

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் ஏற்கெனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சர்ச்சை ஓய்வதற்கு முன்னதாகவே புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் அமைந்து உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் மர்மநபர்கள் சிலர் காவித்துண்டை போர்த்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் சென்றனர். 


பின்னர் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போர்த்தப்பட்டிருப்பதை கண்டித்தும், இந்த அசம்பாவித செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் தர்ணாவில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்குப்பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆர் சிலையில் போடப்பட்ட காவித்துண்டை அகற்றிவிட்டு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பினர்.