ஞாயிறு, 26 ஜூலை, 2020

பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு : மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாய தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை, எப்படியும் ஒழித்தே தீருவது என பாஜக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு 'நிகர சம்பளத்தை' கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக வெளியாகும் செய்திகள், இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1993-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 27 ஆண்டுகளில் இதுவரை 9 முறை க்ரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், இதுவரை நான்கு முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே “க்ரீமிலேயர் வருமான வரம்பு ரூ.15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று பரிந்துரையை வழங்கியிருந்தது என்று மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு க்ரீமிலேயர் வருமான வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்யவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Related Posts:

  • பலவகை ஆக்கிரமிப்பு பள்ளிக்கரணை சதுப்பு நிலமென்பது சற்றேறக்குறைய 12000 ஏக்கர் பரப்பு கொண்டது. அது பலவகை ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு தற்போது வெறும் 1470 ஏக்கர் என்ற… Read More
  • ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!! நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான்… Read More
  • #ஊடகபயங்கரவாதிகள் பேரதிர்ச்சியான செய்தி கசிந்தது. இந்தியா மற்றும் உலகில் மூளை முடுக்குகளில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர்கள் யார்? யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? … Read More
  • மீலாது விழா' அன்பிற்கினிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல் அடியார்களே.!! ரபீஉல் அவ்வல் மாதமும் ; முஸ்லிம்களும் ...!!! இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதமான இந்த '… Read More
  • மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் தேர்தல் சவுதி அரேபியா தேர்தலில்,வெற்றிபெற்ற பெண்களின்எண்ணிக்கை 20 ஆக உயர்வு மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதிஅரேபியாவில் தேர்தல் என்பதே அபூர்வம்ஆகும். இதற்கு மு… Read More