திங்கள், 27 ஜூலை, 2020

கொரோனா தொற்று ஏற்பட்டால் அஞ்ச வேண்டாம்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

கொரோனா தொற்று ஏற்பட்டால் அச்சப்பட தேவையில்லை என்று கொரோனா சிகிச்சையில் உள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கொரோனா தொற்று ஏற்பட்டு போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவில் பேசியுள்ள அவர், தன் உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளதாக கூறியுள்ளார். உயிரைத் துச்சமாக நினைத்து, தன்னலம் பாராமல் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு விலைமதிப்பில்லாதது என்றும் பாராட்டியுள்ளார். 

நோயாளிகளைக் காக்க பாடுபடும் மாநில கொரோனா தடுப்பு போராளிகளுக்கு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

4

மேலும் அவர் பேசுகையில், ’கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா அறிகுறிகள் இருந்தால் மறைக்கக் கூடாது. உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெறத் தொடங்குங்கள். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையானது உங்கள் உடல்நலனை பாதுகாக்கும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கொரோனாவைத் தடுக்க இம்மூன்றும்தான் மிகப் பெரிய ஆயுதங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts:

  • மாமரத்தின் மருத்துவக் குணங்கள் சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போ… Read More
  • தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை! கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை; சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை! தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்! நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு … Read More
  • மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்? காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.… Read More
  • நீ ஒரு தேச துரோகி. லலித் மோடி தப்பி ஓட்டம். விஜய் மல்லையா தப்பி ஓட்டம் கச்சா எண்ணை குறைந்தும் அம்பானிகளுக்காக பெட்ரோல் டீசல் விலை குறையாமை. அதானிக்காக இந்தியன் வங்… Read More
  • வெள்ளை மாளிகையில் ஹிஜாப்... அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் செய்யும் வெள்ளை மாளிகையில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் பெண் பணியமர்த்தப்பட்டுள்ளார்..அதுவும் பல்வேறு ரகசியங்கள் க… Read More