புதன், 22 ஜூலை, 2020

ஐடி ஊழியர்களுக்கு டிச. 31 வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுமதி: மத்திய அரசு

ஐடி,பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி’ புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதிவரை  மத்திய அரசு நீட்டித்தது.

 

 

“கொரோனா பெருந்தொற்று காரணமாக இதர சேவை வழங்குநர்கள், வீட்டிலிருந்து 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பணி’ புரிவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கப்படுகிறது ” என்று தொலைதொடர்புத் துறை தனது ட்வீட்டர் கணக்கில் தெரிவித்தது.

 

 

தற்போது, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் 85 சதவீதம் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். மேலும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 28ம் தேதி, ‘வீட்டிலிருந்து பணி’ புரிவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 ம் தேதியில் இருந்து ஜூலை 31ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டிப்பதாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11.55 லட்சத்தை தாண்டியது. நேற்று, வரை கொரோனா தொடர்பான உயிரிழப்பு 28,084-ஐத் தாண்டியது.

Related Posts:

  • மருத்துவம் * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர… Read More
  • அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள்  நாமக்கல் மாவட்டத்தில் தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இராசிபுரம் பகுதியை சேர்ந்த மகரிஷ… Read More
  • அத்தி 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிற… Read More
  • குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்! அப்போ கட்டாயம்இதைப் படியுங்கள்!.............. ¨ குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. ¨ வயிற்றில் அமிலச் சுரப… Read More
  • லண்டனில் ஒரு ‘ஹிஜாப் அணிந்த கிக் பாக்ஸர்’ ரிட்டனில் முஸ்லிம் பெண் ஒருவர் சக முஸ்லிம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிக் பாக்ஸிங் தற்காப்புக் கலையை கற்றுக்கொடுத்துவருகின்றார். மூன்று … Read More