வெள்ளி, 24 ஜூலை, 2020

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் - புதுவை முதல்வர் அறிவிப்பு!

Image

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து இறுதியாக பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 9 கோடியே 16 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக குறிப்பிட்டார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 700 ரூபாய் வழங்கப்படும் எனவும், கொரோனா நோயால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.