செவ்வாய், 21 ஜூலை, 2020

கொரோனா காலத்துல இது தாங்க அரசோட சாதனை – ராகுல்

Rahul Gandhi tweets on the achievements of government during the corona : கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வுளை பட்டியிலிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி. இந்தியா கொரோனாவுக்கு பெருந்தொற்று பரவலில் தன்னிறைவை அடைந்ததற்கு இவைகள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

கொரோனா நோய் பரவல் இந்தியாவில் துவங்கும் போது ஆரம்பித்து தற்போது வரை நிகழ்ந்துள்ள அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிட்டு ட்வீட் செய்துள்ளார். பிப்ரவரியில் நமஸ்தே ட்ரம்ப், மார்ச்சில் ம.பி. ஆட்சி கவிழ்ப்பு, ஏப்ரலில் மெழுகுவர்த்தி ஏந்துதல், மே மாதத்தில் பாஜக அரசின் ஒராண்டு நிறைவு கொண்டாட்டம், ஜூனில் பீகார் மாநில தேர்தலுக்கான ஆன்லைன் பிரச்சாரம், ஜூலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சியை கவிழ்க்க திட்டம் என இந்தியில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி. இந்த ஏற்பாடுகளும் திட்டங்களும் தான் கொரோனா பெருந்தொற்றில் இந்தியாவை தற்சார்புடன் விளங்க வைத்துள்ளது என்றும் அவர் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.