வெள்ளி, 24 ஜூலை, 2020

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான சந்தேகங்கள் குறித்து சிபிசிஐடி போலீசாருடன் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை!

Image

சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பான சந்தேகங்கள் குறித்து சிபிசிஐடி போலீசாருடன் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வழக்கு ஆவணங்களில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று சென்றனர்.

சாத்தான்குளம் வழக்கு தொடர்பான சந்தேகங்கள் குறித்து, சிபிசிஐடி போலீசாரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் கலந்தாலோசித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவற்றின் நகல்களை பெற்றுக்கொண்டு, சிபிஐ அதிகாரிகள் மீண்டும் மதுரை புறப்பட்டு சென்றனர்.