வியாழன், 23 ஜூலை, 2020

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதாக அசோக் கெலாட் குற்றச்சாட்டு!

Image

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜூலை 19ஆம் தேதியிட்டு, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளிவந்துள்ளது. அதில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைக்கும் முயற்சிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இது மக்களை அவமதிக்கும் மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்புகளை வெளிப்படையாக மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தாங்கள் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அல்லது தவறாக வழிநடத்தப்படுகிறீர்களா என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும், இந்த சதி திட்டங்களில் ஈடுபடுபவர்களை வரலாறு மன்னிக்காது எனவும் அசாக் கெலாட் கூறியுள்ளார். மேலும், ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.