புதன், 29 ஜூலை, 2020

ப.சிதம்பரம் கேள்வி!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததாக கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம் என பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்வதாக கூறியுள்ள அவர்,  நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்தது  சரியான முடிவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே, அது சரியான முடிவின் விளைவா? என வினவியுள்ள ப.சிதம்பரம், பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ப.சிதம்பரம், இதுதான் சரியான முடிவுகளின் பயனா? எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.