வியாழன், 1 செப்டம்பர், 2016

உக்கடை கிராமத்தில் போராட்டம் :மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

உக்கடை கிராமத்தில் போராட்டம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியம், பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கமலாபுரம், உக்கடை கிராமத்தில் 31-08-2016 அன்று காலை, ஓ.என்.ஜி.சியின் எண்ணெய்-எரிவாயுக் குழாய்ப் பதிப்பைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தலைமை ஆலோசகர் இரா. பாரதிசெல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சித்ரா ஜெயராமன், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செ. பாண்டியன், கோட்டூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அம்மாகண்ணன் மற்றும் கமலாபுரம் கிராம பொதுநலக் குழுவைச் சேர்ந்த தன்ராஜ், பாலஞானி, கலைவாணி மோகன், தமிழ்ச்செல்வன் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
source: 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு