சனி, 8 ஏப்ரல், 2017

மின்சாரம் இல்லாமல் இயற்கை குளிர்சாதனப் பெட்டியை ‌நெதர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டி. ஆனால், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு கேடு தரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை என்பது ஆச்சரியமான விஷயம். குளிர்சாதனப் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள டேங்கில் குளிர்ந்த தண்ணீரை நிரப்ப வேண்டும். அந்தத் தண்ணீர் குளிர்சாதனப்பெட்டி முழுவதும் சீரான குளிரை ஏற்படுத்தி உணவுப் பொருட்களை பதப்படுத்துகிறது‌. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லை என இதை பயன்படுத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன பெட்டியின் கொள்ளளவு, சாதாரண குளிர்சாதனப் பெட்டியைப் போல 20 மடங்கு அதிகமான கொள்ளளவைக் கொண்டது. குளிர்சாதனப் பெட்டியி‌‌ன் உள்ளே நிலவும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கண்டறியும் வசதியும் உள்ளது. சுற்றுச்சூழலுக்கும், வீட்டிற்கும் நன்மை ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் நெதர்லாந்து மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது.

Related Posts: