வியாழன், 12 அக்டோபர், 2017

“பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது!” : சர்வதேச நாணய நிதியம் October 12, 2017

“பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது!” : சர்வதேச நாணய நிதியம்


பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கத் தலைவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் விக்டர் காஸ்பர், சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார். 19ம் நூற்றாண்டில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக தனி நபர் வருமானம் அதிகரித்திருப்பதால் ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறு இருந்தாலும், சீனா, இந்தியா, அமெரிக்காவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் உணர்த்துவதாக விக்டர் காஸ்பர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை குறைக்கவும், நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியது அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

2017-18ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4%-ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தற்போது தெரிவித்துள்ளது. இது முன்னதாக கணிக்கப்பட்டதை விட 0.3% குறைவாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தகதி அடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டும் இது தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: