Home »
» அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்து சிறைபிடிப்பு! January 10, 2018
ஈரோட்டில் அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பேருந்தில், அதிக கட்டணம் வசூல் செய்ததாக பயணிகள் புகார் அளித்தனர். வழக்கமாக இந்த வழித்தடத்தில் 15 ருபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், 50 ருபாய் வரை நடத்துனர் கட்டணம் வசூல் செய்துள்ளார். பேருந்தில் பயணித்த பொதுமக்கள், ஈரோடு பேருந்து நிலையத்தில், பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை எச்சரிக்கை செய்ததுடன், கூடுதலாக வசூல் செய்த பணத்தையும் பயணிகளிடம் திரும்பவும் ஒப்படைத்தனர்.
Related Posts:
கண்டங்கத்திரி
குப்பை மேட்டிலும் குவிந்து கிடக்குது மருத்துவம்: காய்ச்சலை விரட்டும் கண்டங்கத்திரி
பாட்டுக்கு அழகு கூட்டத்தைக் கூட்டுவது; மருந்துக்கு அழகு நோய… Read More
வெடிக்காத குண்டுகளை - பூச்செண்டு!
இஸ்ரேலின் வெடிக்காத குண்டுகளை எடுத்து செயலிழப்பு செய்து அதில் பூச்செண்டு!
பூச்செடிகளை தயாரிக்கும் பாலஸ்தீன அன்னை ஹீமைரா.
இந்த முதிய வயத… Read More
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து!
உடல் தட்பவெப்பநிலையின் சமநிலை குலைந்து வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை கிருமிகள் … Read More
யார் உண்மையான தீவிரவாதி
நண்பர்களே முடிந்தவரை இந்த படத்தை சேர் செய்யவும்..உலகம் உணரட்டும் யார் உண்மையான தீவிரவாதி என்று!!
… Read More
மன அழுத்தம்
நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மனஅழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒர… Read More