Home »
» ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர் உடல் கோழிக்கோடு அருகே மீட்பு! January 3, 2018
ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தூத்துக்குடியை சேர்ந்த கினிஸ்டன் என்ற மீனவரின் உடல் கோழிக்கோடு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வீசிய ஒக்கி புயலில் சிக்கி ஏராளமான மீனவர்கள் காணாமல் போயினர். அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல மீனவர்கள் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டனர்.தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த கினிஸ்டன், ஜோசப், ஜூடு, பாரத், ரவிந்திரன் மற்றும் ஜெகன் ஆகிய 6 மீனவர்கள் கன்னியாகுமரி கடலில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், அவர்களது மீன்பிடி படகும் ஒக்கி புயலில் சிக்கி கடலில் மூழ்கியது.இதில், ஜெகன் மட்டும் உயிரோடு காப்பாற்றப்பட்டார். ஜூடு என்ற மீனவரின் உடல் கேரள கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் கோழிகோடு கடற்கரை பகுதியில் ஒதுங்கிய உடல், தூத்துக்குடியை சேர்ந்த கினிஸ்டன் என்ற மீனவரின் உடல் என டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கோழிக்கோடு மருத்துவமனையில் உள்ள கினிஸ்டனின் உடலை பெறுவதற்காக, அவரது உறவினர்கள் கோழிக்கோடு புறப்பட்டு சென்றுள்ளனர்.
Related Posts:
எறிவதை பிடிங்கிவிட்டால் கொதிப்பது தானே அடங்கிவிடும்
இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை எப்போதுமே தன் வசம் வைத்திருக்க துடிக்கும் RSSசுடனும் அதன் தலைவர் மோகன்பகவத்துடன் இந்… Read More
Heart Attack
… Read More
இந்தியாவிற்கு எதிராக உளவு பார்த்து சிக்கிக்கொண்ட உளவாளிகளின் பட்டியல்
அந்நிய நாட்டிற்கு விசுவாசமாக இருந்து இந்தியாவிற்கு எதிராக உளவு பார்த்து சிக்கிக்கொண்ட உளவாளிகளின் பட்டியல்:
——————–
1) 2010:- பாகிஸ்தான் இந… Read More
ஏர்வாடி காஜா படுகொலை சம்பவத்தை மறக்கடிக்க பா.ஜ.க வின் அடுத்த கட்ட சதிசெயல் : ஆரம்பம்
வாணியம்பாடி, ஜன.2–
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது60). பா.ஜனதா கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும்,… Read More
தீவிரவாதிகளை, வாலிபர்கள் என்று செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு -த்தூ....
கமுதி அருகே வாகன சோதனையில், நாட்டுத்துப்பாக்கியுடன் காரில் வந்த மணி, ராஜா, காலிசுவாரன், காளிமுத்து, வேல்முருகன், தர்மலிங்கம், முத்து என்ற… Read More