ஞாயிறு, 31 மே, 2020

COVID 19 INDIA

...

இவர்கள் தாங்குவார்களா?: கமல. செல்வராஜ்,

முனைவர் கமல. செல்வராஜ்.கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு இடதுகரை சானல் பாய்ந்தோடும் படப்பச்சை முதல் மஞ்சாலுமூடு வரை, சானலின் இரு கரைகளிலும் அரசுக்குச் சொந்தமானப் புறம்போக்குக் நிலத்தில் சில நூறு வீடுகள். பெரும்பாலான வீட்டில் உள்ளவர்கள் காலம்காலமாக வயலில் உழவு, நடவு, களை எடுத்தல், அறுவடை செய்தல் என உழவுத் தொழில் சம்பந்தமான வேலைகள் மட்டுமே அன்றாடம் செய்து வந்தனர்.காலப்போக்கில் வயல்வெளிகள் குறைந்து அவை அனைத்தும் ரப்பர் தோட்டங்களாகவும், தென்னந் தோப்புகளாகவும்...

மருத்துவ இட ஒதுக்கீடு துயரம்! : ரவீந்திரன் துரைசாமி

இட ஒதுக்கீடுக்கான இன்னொரு போராட்டக் களம் தமிழகத்தில் சூல் கொள்கிறது. மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவுக்கு மாநிலங்கள் ஒதுக்கும் சீட்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு இல்லை என்பதுதான் இதற்கான காரணம்.கொஞ்சும் புரியும்படியாக பார்க்கலாம்!மருத்துவக் கல்வியில் 3 வகைகளில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுகிறது. ஒன்று, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், மத்திய அரசு இட ஒதுக்கீடு நடைமுறைப்படி மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன....

தமிழகத்தில் பஸ்கள் இயக்கம், இ-பாஸ் தேவையில்லை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்ததுஇந்த நீட்டிப்பு காலத்தில், சில மனடலங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து நாளை  (ஜூன் 1ம்) முதல்  இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது....

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது, பின்னர் இது 4வது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் Unlock 1.0 என்ற பெயரில் முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு:இதன்படி Containment Zones எனப்படும்கொரோனா நோய்க்கட்டுப்பாடு...

வட இந்தியாவை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளது: தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின்

கொரோனோ விவகாரத்தில், தமிழக அரசு காட்டி வரும் அலட்சியத்தை, வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடரக் கூடாது, என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மாநிலங்களில், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள், தற்போது தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களுக்க வரத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், இங்குள்ள வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு...

ஒரு பனிப்போரை உருவாக்க முயல்கிறது: ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் குற்றச்சாட்டு

சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ளதால் ஒரு ஆபத்தான பனிப்போரை உருவாக்க அவர் வழிவகை செய்துவருவதாக ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி சீனா ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது....

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

நாசாவை சேர்ந்த இரண்டு வீரர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவன ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்ப நாசா முடிவு செய்தது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நாசாவுடன் இணைந்து விண்வெளிக்கு...

9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி!

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில்...

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்!?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:*...