தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டு வருகின்றன. பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை அடுத்து, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில்...